11. சேக்கிழார் காலம் சேக்கிழார் புராணம் சேக்கிழார் வரலாறு, இப்பொழுதுள்ள பெரிய புராணப்பதிப்புக்களின் முதலில் அல்லது ஈற்றில் சேர்க்கப்பட்டுள்ள 'திருத்தொண்டர் புராண வரலாறு அல்லது சேக்கிழார் புராணம் என்பதில் காணப்படுகின்றது. இதுவே சேக்கிழார் வரலாற்றைக் கூறவந்த முதல் நூலாகும். இதனிற் கூறப்படும் சேக்கிழார் வரலாறு இதுவாகும்: - "தொண்டை நாட்டு 24 கோட்டங்களுள் ஒன்றாகிய புலியூர்க்கோட்டத்தில் குன்றை வளநாட்டுக் குன்றத்தூரில் வேளாளர் மரபில் சேக்கிழார் குடியில் அருள்மொழித்தேவர் என்பவர் பிறந்தார். அவர் தம்பி பெயர் பாலறாவாயர் என்பது. அருள்மொழித் தேவரது புலமைச் சிறப்பு மிகுதிப்பட, அவர் குடிப்பெயரானே, சேக்கிழார் என்று குறிக்கப்பட்டார். அவரது பெரும் புலமையைக் கேள்வியுற்ற அநபாய சோழ வேந்தன்' அவரைத் தனது முதல் அமைச்சராகக் கொண்டான்; அவருக்கு 'உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டம் கொடுத்தான்." "சேக்கிழார் சோழநாட்டுத் திருநாகேச்சரத்தில் உள்ள சிவபிரானை வழிபட்டு, அக்கோவிலைப் போன்றதொரு கோவிலைத் தமது குன்றத்துாரில் கட்டி, அதற்குத் திருநாகேச்சரம்' என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.” அக்காலத்தில் அரசன் சமணப் பெருங்காவியமாகிய சீவகசிந்தாமணியைப் படிக்கக்கேட்டு மகிழ்ந்தான்; அதனைப் பலபடப் பாராட்டினான். அதுகண்ட சேக்கிழார், இளவரசனை நோக்கி, ‘சமணர் செய்த அப்பொய்ந்நூல் இம்மைக்கும் பயனில்லை; மறுமைக்கும் பயன் இல்லை. சிவகதை ஒன்றே இம்மை மறுமைகட்குப் பயணிக்க வல்லது, என்றார். அதுகேட்ட
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/144
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை