பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - கால ஆராய்ச்சி ஒருவரால் பிற்காலத்தில் (பெரும்பாலும் சங்க இறுதிக் காலத்தில்) பாடப்பட்ட நூலாக இருத்தல் கூடும் என்று நினைக்க இடம் தருகின்றன. இப்பாடல்களை ஐவரோ பலரோ பாடினர் என்பதை உணர்த்தும் சான்று இப்பாக்களின் நடையில் இல்லை. கலித்தொகையின் காலம் 1. கலித்தொகைச் செய்யுட்கள் பெரும்பாலும் பொருளியல் சூத்திரங்களுக்கு இலக்கியமாய் அமைந்தவை; கைக்கிளை, பெருந்திணைச் செய்யுட்களை உடையவை. 2. மையின் மதியின் விளங்கு முகத்தாரை வவ்விக் கொளலும் அறனெனக் கண்டன்று (குறிஞ்சிக்கலி-26) பெண்டிரை வெளவிக் கோடல் இராக்கத மணம் எனப்படும். இராக்கத மணத்தைத் தொல்காப்பியர் கூறிலர். பெருந்திணைஒவ்வாத காமம் எனத் தொல்காப்பியர் கூறினரே அன்றி, இராக்கத மணமுறையாகிய வெளவிக் கோடலைத் தமிழ் மக்கள் கையாண்டனர் என்று கூறிலர். இராக்கத மணம் அறன் எனத் தொல்காப்பியரோ சங்க நூற் புலவரோ யாண்டும் கூறிலர். ஆரியருடைய எண்வகை மணங்களுள் இராக்கத மணம் ஒன்றாகும். தமிழர்க்கு இம்மணம் உண்டெனக் கூறச் சங்க இலக்கியச் சான்றில்லை. அடியோர் தலைவராக் கொள்ளினும், தமிழகத்துள் அப்படிப்பட்ட பழக்கத்துக்கு மாறாகச் சங்கத்துச் சான்றோர் செய்யுள் செய்யார். ஆகவே, இராக்கத மணம் அறன் எனக் கூறும் இச் செய்யுளும் இது போன்ற கலிச் செய்யுட்களும் கடைச் சங்கப் புலவர்க்குப் பிற்பட்ட இராக்கத மணம் அறம் எனக் கருதப்பட்ட காலத்தனவாகும் என்பதைக் கூறவும் வேண்டுமா? 3. குறிஞ்சிக்கலிச் செய்யுள் ஒன்றில் தலைவி, "தோழி, நீ தெருவில் போவார்க்கெல்லாம் இரங்குதல் வாரணவாசியில் (காசியில்) பிறர் வருத்தம் தம் வருத்தமாகக் கருதும் அருளுடையார் செயலை ஒத்துள்ளதே, (24) எனக் கூறியுள்ளது கருதற்பாலது. ஏனைய தொகை நூல்களுள் இச்செய்தி காணப்பட்டிலது. வாரணவாசி (காசி) நகர மாந்தர் செய்தி எந்த அளவில் தமிழகத்தில் பரவி இருந்தால், அதனைத் தலைமகள் சொல்வதாகப் புலவர் பாடியிருப்பார் என்பது சிந்திக்கத் தக்கது. ஏனைய பழம்பாடல்களில் காணப் பெறாத இவ்வடநாட்டுச் செய்தி சங்க காலத்தின் இறுதியில் அல்லது பிற்பட்ட காலத்தில் தமிழகத்தாரால் அறியப்பட்டதாதல் வேண்டும். 4. ஏனைய தொகைச் செய்யுட்களில் காணப்படாத முன்னிலைப் பன்மைச் சொல்லாகிய நீர், பலர்பாற் சொல்லோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/89&oldid=793435" இலிருந்து மீள்விக்கப்பட்டது