பக்கம்:குக்கூ.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

கலைத்தாராம் தவம்,
கதைக்கிறார் சில
விநோத விசித்திரர்;
மேனகை நீ வர
வேண்டுமன்றல்லவா
தவம் புரிந்தார்
அந்த விசுவாமித்திரர்.



10

எருமை
புல்லைக் கடித்து மென்றது
எருமை முதுகின்
புண்ணைக் கொத்தித் தின்றது
அண்டங் காக்கை.

மீரா ◯ 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/28&oldid=1233658" இலிருந்து மீள்விக்கப்பட்டது