பக்கம்:குக்கூ.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

தேக்கடிக் கரையில்
துதிக்கையைத்
தூக்கிக் காட்டிக்
குட்டியிடத்தில் சொன்னது
யானை ஒன்று,
அதோ பார் படகில்
மனிதர்கள் என்று.


52


கொஞ்சமும் அலுக்காமல்
ஆலமரம்
எத்தனை காலம் இப்படி
தண்ணீரில் முகம் பார்க்கும்
கரையில் நின்றபடி.

48 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/49&oldid=1233076" இலிருந்து மீள்விக்கப்பட்டது