பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

183


"கூடிக்கூடி உன்அடியார்
குனிப்பார் சிரிப்பார் களிப்பாரா
வாடிவாடி வழியற்றேன்
வற்றல் மரம்போல் நிற்பேனோ”

என்று ஆண்டவனிடம் முறையிடுகின்றார். பயனற்ற வற்றல் மரநிலையிலிருந்து தம்மை உய்விக்கத் தம் அகத்து உள்ளத்தை உருக்கிடும் அன்பினைத் தந்தருளுமாறு இறைஞ்சுகின்றார்.

"ஊடிஊடி உடையாயொரு
கலந்துள் ளுருகிப் பெருகிநெக்
காடிஆடி ஆனந்தம்
அதுவேஆக அருள்கலந்தே"

என்பது அடிகளின் அருண்மொழி.

இங்ங்னம் ஊனெலாம் நின்றுருக, தூய அன்புறு பக்தியுடன் வணங்க முன்னைத் தவம் இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர், -

"தவமுந் தவமுடையார்க் காகும்"

என்று கூறுகின்றார். இக்கருத்தை அடிகள், செறிதரு தவத்தின் பயனாகிய அருளின் மேல்வைத்து இறைவனை வணங்க அவன் அருள் வேண்டும் என்பதாக்கி,

"அவனரு ளாலே அவன்றாள் வணங்கி"

என்று கூறி விளக்குகின்றார்கள்.

துரய தவத்தால், அன்புறு பத்தியால் விரும்புவதை எல்லாம் பெறலாம் என்பது வள்ளுவர் கருத்து.

"வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்"

என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள்,