186
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
"அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பினும் வித்து"
என்பது திருக்குறள். இக்கருத்தை அடிகள்,
"...அவா வெள்ளக் கள்வனேனை
மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ
என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே"
என்று அருளியுள்ளார்கள்.
அல்லற் பிறவி நீங்கிப் பேரா இயற்கையைப் பெற வேண்டும் என்பதே வள்ளுவர் குறிக்கோள். இதனை ஆசிரியர்,
"வேண்டுங்கர்ல் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்டா வரும்”
என்று கூறுகின்றார். இக்கருத்தையே அடிகள், தாம் எத்தகைய இன்ப வாழ்வையும் வேண்டாது, பிறப்புறுக்கும்படியாகவே இறைஞ்சுகின்றதாகக் கூறுகின்றார்.
"வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து
தம்மைஎல்லாம் தொழவேண்டிச்
சூழ்த்துமது கரம்முரிலும்
தாரோயை நாயடியேன்
பாழ்த்தபிறப் பறுத்திடுவான்
யானும் உன்னைப் பரவுவனே."
என்பது அடிகளின் அருண்மொழி.
அருளொடும் அன்பொடும் வாராத செல்வம் எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும் கொள்ளுதல் கூடாது என்பது வள்ளுவர் கருத்து.