பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/266

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பழக்கத்தின் வழிச் செல்லுகின்ற பழக்கம். அதுபோல, நல்ல பழக்கம் பழகுதல் என்பது ஒரு நல்ல கலை.

அது படத்தைத் தவிர வேறொன்றும் மகிழ்ச்சிக்கு, களிப்புக்கு இடமில்லை என்று செய்துவிட்டு, "இன்றைக்குப் படத்திற்குப் போகிறார்களே! அடிகளாரின் பேச்சுக்கு இல்லையே” என்று சொன்னால் சரியில்லை. அதற்கு, அடிக்கடி இந்தப்படம் வருகிற நாளெல்லாம் பார்த்து, ஒரு பேச்சுக்கு ஏற்பாடு செய்து, அதிலிருந்து திரும்பக் கொண்டு வந்து சோதனைப்படுத்தி நிறுத்த வேண்டும். அப்படிப் பழக்கப்படுத்தி விட்டால் இன்றைக்குப் படத்திற்குக் கூப்பிட்டால் கூட வரமாட்டார்கள். தொல்லை என்று சொல்லுவார்கள். எனவே பழக்கம்தான் பெரிய காரியம்.

ஆனால், இப்பொழுது நம்முடைய நாட்டிலே சாதாரண மக்களுக்குக் களிப்பு, மகிழ்ச்சிக்குப் பேசும் படத்தைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுவும் பெண்கள் பகுதி மிகவும் கடுமையான வழிகளிலே கவர்ச்சிக்கப்படுகிறது. அண்மையில் ஒரு திரைப்படக் கொட்டகையில் ஐநூறு பேர் இருக்கிற பொழுது அது தீப்பிடித்துக் கொண்டது. அதில் இறந்து போனவர்கள் கிட்டத்தட்ட ஒரு முந்நூறு பேர் பெண்கள்தான். அதாவது திரைப்படக் கொட்டகையிலே அதிகமான இடத்தைப் பிடிப்பவர்கள் இப்பொழுது பெண்கள்தான், என்பது நாம் அறிந்த வரலாறு; உலகறிந்த வரலாறு. அது என்ன காரணம் என்றே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருக்கால், ஆடவர்கள் உழைப்பின் மேல் போவதாலும், புறத்தே வேறு, வேறு துறைகளில் அவர்கட்குக் களிப்பும் மகிழ்ச்சியும் இருப்பதாலும், பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் இத்தகைய மனோபாவங்கள் இருக்கின்றனவா என்பதை சிந்திக்க வேண்டும்.