பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/267

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

255


இப்பொழுது திரைப்படம் 8-45 மணிக்கு என்று சொல்லுகிறார்கள். அதற்கேற்றவாறு என்னுடைய பேச்சை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு வகையில் உதவி செய்திருந்தால், அவரை எட்டுமணி வரை பேசவைத்து உங்களைப் போகாமல் இருக்கிறீர்களா என்று சோதிக்கலாம் என்று நினைத்திருந்தேன். அவர்தான் நீங்கள் திரைப்படத் திற்குப் போவது வரையறுக்கத் தக்கது என்றும், அதில் ஒன்றும் தவறில்லை என்றும் சொல்லிவிட்டார். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், அவரும் மிக விரைவில் முடித்துவிட்டு, அவர் தம் குழந்தைகளுடன் சென்று பார்க்கலாம் என்ற எண்ணமோ என்று தெரியவில்லை, அதனால் நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்து, அவர் நல்ல நிர்வாகி, நல்ல அறங்காவலர், நல்ல தலைவர் என்பதற்கு நல்ல சான்று சொன்னார். எவ்வளவு முடியுமோ, அவ்வளவு செய்கிறோம் என்று சொன்னார். பொதுவாக, யாரும் மாட்டிக் கொள்ளக் கூடாது. மாட்டிக் கொண்டால் அது பெரிய பிரச்சனை. இந்த அறையிலே நிர்வாகக் குழு உறுப்பினர் இருக்கிறார். இன்னொரு நிர்வாகக் குழு உறுப்பினரும் இருக்கிறார். எனவே நாளைக்குப் போட்டி போட்டுக் கொண்டு கேள்விகள் கேட்பார்கள். அவர் யார் ஒருவரையும் மாட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார்.

பொதுவாக, எனக்கு இங்கே பேசுவதற்குரிய தலைப்பை இங்கேயே கொடுத்திருக்கிறார்கள். இரண்டு, மூன்று கேள்விகளையெல்லாம் தயாரித்து முன்பாகவே கொடுத்திருக்கிறார்கள்.பொதுவாக, நம்முடைய சமயம் எது? சமயத்தின் பெயர் எது? என்று அடிக்கடி கேட்பார்கள். நம்முடைய சமயம் என்று சொன்னால், குறிப்பாகத் தனிப்பட்ட முறையில் இங்கே வாழ் வாழ்பவர்களைப் பார்த்தால், நாம் "சைவசமயம்” என்று கூறுவது தவறில்லை போலத் தெரிகிறது.