பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/159

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"தாயுநீயே தந்தைநீயே சங்கரனே யடியேன்
ஆயுநின் பாலன்பு செய்வானா தரிக்கின்ற துள்ளம்
ஆயமாய காயந்தன் னுளைவர்நின் றொன்ற லொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே!”

என்பது பாடல். இக்கருத்தினையே அப்பரடிகளும்,

"மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டளவு யரத்துரண்டி
உய்வதோர் உபாயம்பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர்சாலச்
செய்வதொன் தறியமாட்டேன் திருப்புக லூரரீைரே"

என்பர். இந்த ஐம்புலச் சேட்டைகள் அடியோடு அடங்குதற்கும், உண்மை ஞான உணர்வு தடையின்றி நிகழ்ந்து, திருவருளின்பத்தைத் துய்த்தற்கும் சாதனமாயிருப்பது சிவனடியாருடைய இணக்கமும் வழிபாடும் என்பது சைவத்தின் சிறந்த கொள்கை, சிவபத்தர்களுக்கு அன்பு செய்து, மனம் சொல் செய்கைகளான் அவர்வழி நிற்பாருக்கு உலகியல் உணர்வு மாறிச் சிவாநுபூதியுணர்வே மேம்பட்டு நிகழும். அஃது அங்ங்னம் நிகழவே, உடலுள்ள அளவும் நிற்பனவாய பிராரத்த வினைகள் அவர்க்கு நுகர்ச்சியாதல் செல்லாமையின், அவை வாதிக்கமாட்டா; எனவே வீட்டுணர்வை நிலைநிறுத்துவது சிவனடியாருடைய வழிபாடேயாம். அது மாத்திரமன்றிச் சிவனடியாரல்லாதாருடைய இணக்கம் அறவே நீங்கவும் வேண்டும். இக்கருத்தினை ஆசிரியர் மெய்கண்ட தேவநாயனார்,

"மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்க்குஞ்
சிறப்பிலார் தந்திறத்துச் சேர்வை-யறப்பித்துப்
பத்த ரினத்தாய்ப்பர னுணர்வினா லுணரு
மெய்த்தவரை மேவா வினை"

என்று கூறி விளக்குகின்றார். இக்கருத்தினை அப்பரடிகள்,