முதலும் முடிவும்
83
6
|
சேக்கிழார் பெருமான் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் காவியம் பாடியவர். ஒரு வரலாற்றுக் காவியம் எழுதுவது எளிதன்று. அதிலும், உணர்ச்சியில் இம்மியளவும் குறையாமல் வடித்துத் தருவதென்பது அரிய பணி.
உளம் நிறைந்த பக்தி அனுபவத்தினாலும் அடியார்கள் மாட்சியில் மனங்கலந்த ஈடுபாடு கொண்டமையாலுமே சேக்கிழார் பெருமானால் காவியம் செய்ய முடிந்தது. சேக்கிழார் பெரியபுராணத்தை இயற்றித் தராதிருப்பரானால் துய சிவநெறியின் வரலாறு கிடைக்காமலே போயிருக்கும்.
சிவநெறி வாழ்க்கையோடியைந்தது என்னும் பேருண்மையை உலகுக்கு உணர்த்துவதற்குப் பெரிய புராணமே நமக்குரிய சிறந்த சாதனமாகத் திகழ்கிறது.
அப்பரடிகள் வரலாற்றை அருந்தமிழ்ச் சேக்கிழார் அருள் உணர்வு பொங்கித் ததும்ப வழிய எடுத்து இயம்பும் முறை, எண்ணத்தக்கது.
திருத்தொண்டர்க்கொரு தலைவராக வந்து அவதரித்த திருநாவுக்கரசரைத் தொண்டின் திருவுருவாகவே சேக்கிழார் பெருமான் படைத்துக் காட்டுகின்றார்.