பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பரும் சேக்கிழாரும்

85


எனவும் விளங்கியமையைச் சேக்கிழார் பெருமான் என்பு நெக்குருகப் பாடுகின்றார்.


"தூயவெண் ணிறு
துதைந்தபொன் மேனியும்
தாழ்வடமும்
நாயகன் சேவடி
தைவரு சிந்தையும்
நைந்துருகிப்
பாய்வது போல
அன்புநீர் பொழிகண்ணும்
பதிகச் செஞ்சொல்
மேயசெவ் வாயு
முடையார் புகுந்தனர்
வீதி யுள்ளே”

என்பது திருப்பாடல்.