இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10
கோவேந்தன்
கற்பனையின் பரி கிடைத்தால் கோடி
காவியங்கள் படைத்திடுவேன் பாடி,
விற்பதெங்கே விளைவதெங்கே
விலையும் என்ன விளம்பீர் என்றான்
சொற்களஞ்சிய எதுகைமோனை தேடி!
◯
அனைத்துஉயிரும் கடவுள் என்றான் கீரன்
ஆண்டவனே வடிவுகொண்ட ஈரன்;
முனைந்துசொன்ன நேரத்திலே
மூட்டைப்பூச்சி, கொசு கடிக்கச்
சினந்தழித்தான் முணங்கிக்கொண்டே வீரன்!
◯
இடைவெளியைக் காட்டிநின்றாள் சிறுக்கி;
எழுத்தாளன் கதையளந்தான் கிறுக்கி;
எதையும் பணம் ஆக்குகின்ற
எத்துமுத லாளிக்காகப்
படம் எழுதித் தந்தான் ஒரு பொறுக்கி!
◯
இளங்கோ,கம்பன், வில்லி வள்ளல் கூடி
ஏனோ வந்தார், அலைந்தார் வேலை தேடி—
நிலைமைஇது:'புலவர்தேர்வில்
நிலைத்தால்தான் வேலை' என்றார்
அளவில் தொலை சென்றார் அவர் ஓடி!