பக்கம்:குறும்பா.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

கோவேந்தன்




னைவி, மக்கள் இருக்கையிலே விரும்பி
காதொருத்தி மீது காமம் அரும்பி,
மனைவி புதுக் காதலனைத்
தேடுகின்றாள் என்றவுடன்
மனக்குரங்கு மீண்டதடா திரும்பி!



வெள்ளம்கரை ஏறிவிடின், எறும்பு
வெள்ளம் வாழும் மீன்களுக்கு விருந்து!
வெள்ளம் வற்றி மீன்கள் நிற்பின்,
வீறுடைய எறும்புகட்கு
வெள்ளமீன்கள் அத்துணையும் கரும்பு



நோயாளிகள் மருத்துவர்பா லிருந்து
மீளுவதே மாபெரிய மருந்து;
நோயில்லாத நாட்டு மக்கள்
நுகத்தடியை வீசிவிட்டுப்
போய் உரினை நாடு கொள்வார் விரைந்து:



பாஞ்சாலி பதவியிலே இருந்தாள்.
பாண்டவர்கள் துய்ப்பினாலே இறந்தாள்.
வீழ்ந்தால்போதும் என்றிருந்த
கெளரவர்கள் விம்மி விம்மி

காய்த்தழுதார், மாண்டவளும் சிறந்தாள்:
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/23&oldid=1199684" இலிருந்து மீள்விக்கப்பட்டது