பக்கம்:குறும்பா.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

35


மத்தாப்பூ கொளுத்துகையில் கோடி
வானவில்லின் சிலிர்ப்பளிக்கும் கூடி.
எத்தாட்சியின் தேர்தல் கொள்கை
எத்தனை வண்ணம்! நிலைக்கவில்லை.
முத்தொளியாய் அகல்எரிந்தது நாடி!



வீரப்போரில் இறந்தது நல் அரிமா.
வீரம் பேசியே அரத்தம் குடிக்கும் நரிமா
சாரும் நோயால் சாவணைக்கையில்
சார்ந்த நரிகள் தேர்தல் எண்ணி
ஈரிரு கோடிச் செலவில் சென்றது வெறிமா!



புரட்சி என்பது கட்டிளமைக் கூறு,
பொங்கி எழும் எரிமலையின் வீறு!
புரட்டருக்கு வெடிமருந்து
பொருளாளிக்குத் தாக்கும்படை
பொதுவுடைமைக் காரர்க்குக் காட்டாறு!



அறிவுக்கொவ்வா திரைப்படத்தில் நடித்தான்
அரசியலில் அதிகார மது குடித்தான்:
வெறியனாகி நாடழித்தான்...
வீறிட்டெழுந்த மக்களின்முன்
சிறியனாகி தனது வாழ்வை முடித்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/38&oldid=1201011" இலிருந்து மீள்விக்கப்பட்டது