பக்கம்:குறும்பா.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறும்பா

47


தஞ்சைக் கோயிலை வாங்குவேன் என்றான் பித்தன்
தான் அதனை விற்கேன் என்ருன் முத்தன்
தஞ்சையின் செய்தி ‘நிருபர்’ உடனே
“தமிழகத்தின் கோயில் எல்லாம் மொத்தம்
வஞ்சகமாக விற்கப்பட்டன...”
வாசித்த செய்தியால் அமைச்சரிட்டார் சட்டம்!



துண்டணிந்தே உவமை உளறும் சோலை,
தொடைக்கும், தோட்கும் இடையிலாடும் மாலை;
கண்டொருத்தி கால்பிடிக்கையில்
கதவைத் தட்டினன் மற்றோர் காய்ந்த ஒலை;
துண்டெடுத்துத் தோளிலிட்டுத்
தெருவில்வந்தான் துலங்கிற்றவள் சேலை!



கெட்டவராய் இருப்பின் வியப்பில்லை,
கேடுகெட்ட அரசியலின் எல்லை,
முட்டாள்களைத் தேர்வதிலும்
முனைத்தரசு ஆள்வதினும் தொல்லை,
வெட்கமற்று வாய் கிழிய
வெற்றறிவைக் காட்டல், வியப்பில்லை!



வைப்பாட்டியாய் மூன்று மாதம் இருந்து
மாற்றானோடு சென்றாள் மருக்கொழுந்து.
கைப் பணத்தைக் கொண்டபின்பு
கண்டவர்பின் சென்று தன்னைத் துறந்து
தப்பாய் வாழ்ந்தான் கணவன் என்று
தலையில் அடித்துக் கொண்டாள்; ஊரார் விருந்து;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறும்பா.pdf/50&oldid=1195852" இலிருந்து மீள்விக்கப்பட்டது