62
கோவேந்தன்
உழைப்பினாலே விளையும் பயிர் நாற்று
உலகுயிர்கள் அனைத்தினுக்கும் ஊற்று,
நுழைக்கும் விதி, சோம்பலூட்டும்
நோய்க்கடவுள் நம்பிக்கையை மாற்று.
உழைக்கும் மக்கள் அன்பில் உறவில்
உண்மையுண்டு மானுடத்தைப் போற்று!
◯
கணவன்ஒரு பரத்தையின்பால் சென்றான்
மனைவி ஒரு பரத்தனிடம் சென்றாள்
கணவிருட்டில் திசைமாறினர்...
காதலர்என்று இருவரும்இதழ் தின்றார்,
யுணர்கையிலே கணவன் மனைவி
புரிந்ததும் ஒன்றும் நடவாததுபோல் சென்றார்!
◯
வெஞ்சினத்துக் குமுறலையும் புரட்சிக்
கனலையும் தாம் வெளியிடலாய் வறட்சி
விஞ்சிநிற்கும் சிற்றுணர்ச்சி
ஊதும் நுரைக்குமிழிகளின் திரட்சி!
மிஞ்சும்குட்டி பொருளாளிய
மிகுவியப்பு வான்கோழியின் அரட்சி!
◯
விலைமகளின் உறவினனாய் ஒருவன்
வீற்றிருந்தால், வந்திடுவான் மருகன்.
நிலைஎனவே ஆளரசில்
நிமிர்ந்திடுவோர் மக்கள் பக்கம் ஒருகண்
விலைகுறித்தால் துறந்திடுவார்
விலக்கிடுவார் அழித்திடுவார் மறுகண்!