பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/109

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாலை கண்ட மலரைப் போல
வாடி வதங்கிச் சோர்ந்து,
காலை நீட்டி, முதுகைத் தாழ்த்திக்
கசங்கை வெட்டிப் பிளப்பாள்! 4

மூக்கு வடியும் பிள்ளை வளைந்த
முதுகில் தூங்கி விழிக்கும்;
நாக்கை நீட்டித் தலையை
யாட்டிப் பசிக்குக் கூழைக் கேட்கும்! 5

கொடுத்த கூலி வாங்கிக் கொண்டு
பழையது கொஞ்சம் கேட்பாள்!
எடுத்துவரக் கண்கள் காட்டும்
ஒளியை என்ன என்று சொல்வேன்! 6

மொந்தைக் கூழை எடுத்துப் பார்ப்பாள்;
குழந்தைக்குக் கொஞ்சம் கொடுப்பாள்;
சிந்திச் சிந்திக் குடிக்கக் கண்டு
சிரித்து முத்தம் கொடுப்பாள்! 7

அகணிப் பட்டை, கசங்குக் கற்றை ,
உகரம் போன்ற அரிவாள்,
முகம்வெ ளுத்த குழந்தை, மூளி
மொந்தை யவள் சொத்தே! 8


92 ♦ கவிஞர் வாணிதாசன்