பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
45

ன்னை தந்தை உன்முன்னோர்!
அவர்க்கு முன்னோர் தாய்தந்தை!
தென்னா டளித்த மூதாதையரே
செந்தமிழ் நாட்டு முன்னோர்கள்! 1

கல்வி கேள்வி வல்லோர்கள்;
கடமை தவறா நல்லோர்கள்;
செல்வம் தேடி ஈந்தோர்கள்;
செழுமை யோடு வாழ்ந்தோர்கள்! 2

அறத்தின் வழியே நின்றோர்கள்;
அல்லவை யாவும் கொன்றோர்கள்;
மறத்தின் எல்லையைக் கண்டோர்கள்;
மறிகடல் வெற்றி கொண்டோர்கள்! 3

வயலைத் திருத்தி விளைத்தோர்கள்;
மலைபடு மணியை அளித்தோர்கள்;
கயல்விற் புலியைப் பொறித்தோர்கள்;
கனக விசயரை, நெரித்தோர்கள்! 4


குழந்தை இலக்கியம் ♦ 93