பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
47

றிவைப் பெருக்கும் கூடம்;
அன்பைப் பெருக்கும் கூடம்;
மறைவு நீக்கி உம்மை
மனிதன் ஆக்கும் கூடம்! 1

ஒழுக்கம் சேர்க்கும் கூடம்;
உணர்வைச் சேர்க்கும் கூடம்;
வழுவை நீக்கி உம்மை
வாழ வைக்கும் கூடம்! 2

கண்ணை அளிக்கும் கூடம்;
கருத்தைக் கொடுக்கும் கூடம் ;
எண்ணம் தன்னில் தூய்மை
என்றும் சேர்க்கும் கூடம்! 3

கடமை காட்டும் கூடம்;
கைத்தொழில் பழக்கும் கூடம்;
மடமை போக்கி உம்மை
வாழ வைக்கும் கூடம்! 4


100 கவிஞர் வாணிதாசன்