பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/131

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
54

ள்ளி பயிலும் சிறுவர் நாளை
பாரை ஆளப் போறீர்!-தமிழ்
ஊரை ஆளப் போறீர்!
பள்ளிப் படிப்பு பாதி யானால்
பாரை எப்படி ஆள்வீர்?-தமிழ்
ஊரை எப்படி ஆள்வீர்? 1

கல்வி பயிலும் சிறுவர் நாளை
கடலைத் தாண்டப் போறீர்!-நீர்த்
திடலைத் தாண்டப் போறீர்!
கல்வி கற்றுத் தெளியா விட்டால்
கடலை எப்படி ஆள்வீர்?-நீர்த்
திடலை எப்படி ஆள்வீர்? 2

சாலை பயிலும் சிறுவர் நாளை
தண்டெ டுக்கப் போறீர்!-மறத்
தொண்ட ளிக்கப் போறீர்!
சாலைப் படிப்பைத் தட்டிக் கழித்தால்
தண்டெ டுக்கப் போமோ?-மறத்
தொண்ட ளிக்கப் போமோ? 3


114 ♦ கவிஞர் வாணிதாசன்