பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருத்துவர் காலை வந்தார்
மருந்தை எழுதித் தந்தார்!
மருந்தை மகனும் கடையில்
வாங்கி வந்தான் விரைவில்!

5

அருந்தக் கொடுப்பது ஒன்றும்
அறைத்துப் பூசுவ தொன்றும்
மருந்தின் மீதே எழுதி
இருப்பதை மகனும் அறியான்!6

<poem>மருந்தைப் படிக்காப் பையன்
மாற்றிக் கொடுத்து விட்டான்!
அருந்திய மருந்து நஞ்சென்று
அறியான் எழுத்தை அறியான்!7

<poem>கிழவன் கண்கள் பிதுங்க,
கிட்டியே பற்கள் நெருங்க
அழுது பையன் ஒடி
அழைத்தான் மருத்துவர் நாடி!8

<poem>மருத்துவர் வந்து பார்த்தார்
மருந்தை எடு' எனக் கேட்டார்
அருந்தும் மருந்தும் இருக்க
நிலைமை அறிந்து கொண்டார்!9

<poem>மாற்று மருந்து கண்டார்!
மகனை நொந்து கொண்டார்!
ஏற்ற கல்வி இல்லை!
அதனால் என்றும் தொல்லை!

10


130 ★ கவிஞர் வாணிதாசன்