இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காலும் கையும் சுருங்கிக்
கண்ணின் ஒளியும் ஒடுங்கித்
தோலும் நரம்பு மாகத்
தோன்றி வாழ்ந்தாள் கிழவி!
1
கிழவிப் பிள்ளை அழகன்
திருமண மான குமரன்!
பழகும் மனைவி பேச்சால்
தாயைப் பழித்து வந்தான்!
2
வீட்டை விட்டுத் தள்ளி,
வெறுத்துப் பேசி எள்ளி
மாட்டுக் கொட்டில் விட்டான்;
மல்லையில் - சோறும் இட்டான்!
3
வழக்கம் போல ஒருநாள்
மல்லை கொட்டில் இல்லை!
அழகன் மல்லை தேடி
அலைந்தான் அங்கிங்(கு) ஓடி!
4
136 ♦ கவிஞர் வாணிதாசன்