இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தந்தையும் தாயும் இறக்க,
இருவரும் தனித்தனி உலைவைத்தார்;
முந்தையர் சொத்தாம் நன்செய் வயல்வெளி
முறையே பகிர்ந்து கொண்டார்!
1
அண்ணன் திருமணம் ஆனவன்; பிள்ளை
ஆறுக்கு மேலுடையான்!
மண்ணை உழுவான்; விதைப்பான்; அறுப்பான்!
வயிற்றுக்குப் போதாதே!
2 -
இருவரும் ஒருமுறை உழுதார், விதைத்தார்; -
எருவிட்டே வளர்த்தார்!
பருவம் வந்தது! வயலும் விளைந்தது!
பங்கை அறுத்துவந்தார்!
3
138 ♦ கவிஞர் வாணிதாசன்