பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



64

தந்தையும் தாயும் இறக்க,
இருவரும் தனித்தனி உலைவைத்தார்;
முந்தையர் சொத்தாம் நன்செய் வயல்வெளி
முறையே பகிர்ந்து கொண்டார்!

1

அண்ணன் திருமணம் ஆனவன்; பிள்ளை
ஆறுக்கு மேலுடையான்!
மண்ணை உழுவான்; விதைப்பான்; அறுப்பான்!
வயிற்றுக்குப் போதாதே!

2 -

இருவரும் ஒருமுறை உழுதார், விதைத்தார்; -
எருவிட்டே வளர்த்தார்!
பருவம் வந்தது! வயலும் விளைந்தது!
பங்கை அறுத்துவந்தார்!

3


138 ♦ கவிஞர் வாணிதாசன்