பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களத்திற் கட்டை அடுக்கியே வைத்தார்;
காத்தார் இரவினிலே!.
உளத்தில் அண்ணன் நினைத்தான் தம்பிக்(கு)
உதவி செய்வதென்றே!

4

‘மறைவாய் இரவில் வயல்நெற் கட்டை
வைத்தால், அவன் கட்டில்
நிறையும் நெல்லும்; பொருளும் நிறையும்;
திருமணம் நிறைவேறும்!’

5

என்று நினைத்தே காலம் நோக்கி
இருந்தான் அண்ணனுமே!
சென்றன இருநாள்! நிலவும் சென்றது!
செயற்பட முடிவுகொண்டான்!

6

‘அண்ணன் குடும்பம் பெரியது;
பிள்ளை ஆறுக்கும் மேலுண்டாம்!
மண்ணில் ஒருவன் நான்;என் கட்டை
மறைவாய் அவன்கட்டில்

7

வைப்பேன்; அறியான்; நெற்பொதி வளரும்;
வாழ்க்கை வளம்வளரும்;
இப்பொழு திரவே செய்வேன்' என்றான்; —
எழுந்தான். தம்பியுமே!

8


வழியில் இருவரும் வந்தனர் தனித்தனி
வாய்க்கால் வழியாக!
இழியும் போழ்து கட்டோடு கட்டும்
இடிக்கச் சிரித்தனரே!

9


குழந்தை இலக்கியம் ♦ 139