பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



67

கோழி வளர்க்கவே எண்ணி – வீட்டின்
கோடியில் கூண்டொன்று கட்டினாள் பொன்னி!
கோழியும் வாங்கி வளர்த்தாள்;–கன்னிக்
கோழியும் சேவலும் கூண்டி லடைத்தாள்!

1

முட்டையும் இட்டது பெட்டை!– அந்த
முட்டையைத் திருடிற்று வீட்டுநாய் நெட்டை!
‘முட்டை இடவில்லை’ என்றே–பொன்னி —
முகம் சோர்ந்தாள் கூண்டோரம் அடிக்கடி நின்றே!

2

எங்கோ புதரினில் கோழி – முட்டை
இடுவதாய் எண்ணினாள் இரண்டொரு நாழி!
இங்கே இடுவதற் கேற்ற – வகை
ஏதென எண்ணினாள்; வழிகண்டாள் பொன்னி!

3


144 ♦ கவிஞர் வாணிதாசன்