இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மழையே! மழையே! வா! வா
வாழ்வின் உயிரே! வா! வா!
உழவர் உன்னை எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் பேசுகின்றார்!-மழையே!
ஏரி குளங்கள் நிறைந்திடவும்,
எருமை மாடு களித்திடவும்,
ஊரில் உள்ள வயலெல்லாம்
பச்சைப் பட்டை உடுத்திடவும்-மழையே!
மரங்கள் செடிகள் தழைத்திடவும்
மலர்கள் பூத்துச் சிரித்திடவும்,
தெருவிற் சிறுவர் தாளாலே
கப்பல் செய்து விட்டிடவும்-மழையே!
குழந்தை இலக்கியம் ♦ 15