பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உணவு விடுதி பலஉண்டே !
உறங்கும் விடுதி பலஉண்டே !
உணவுக் காக எச்சிலையை
ஓர்ப்பாய் பொறுக்கும் உயிர்உண்டே!
மணமில் மலரும் மனமலரும்
மகளிர் கூந்தல் வான்வில்லாம்!
பணத்தைப் பறிக்கும் பகட்டெல்லாம்
பட்டணம் பார்க்கலாம் நாளெல்லாம்! 6

கூவும் குயில்கள் அங்கில்லை!
குளிர்செடி புதர்கள் அங்கில்லை!
பூவும் புத்தம் பூவில்லை!
பொலிவும் இயற்கைப் பொலிவில்லை!
தாவிப் பாயும் முயலில்லை!
சாரல் தவழும் காற்றில்லை!
ஆவி போக்க அங்கிங்கும்
ஆயிரம் உண்டே எங்கெங்கும்! 7

அறிவைப் பெருக்கக் கல்லூரி,
ஆடல் பாடல் கல்லூரி.
பொறியியல் உணர்த்தும் கல்லூரி,
பொருளியல் உணர்த்தும் கல்லூரி,
வெறியைப் போக்கும் கல்லூரி,
விளைவைப் போக்கும் கல்லூரி,
நெறியை உணர்த்தும் கல்லூரி,
நிறைய உண்டே! நெறியுண்டோ? 8


குழந்தை இலக்கியம் ♦ 31