பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடற்கரை யோரச் சுழல்விளக்குக்
கண்ணைக் கவரும் பால்விளக்கு!
நடக்கும் பாதைத் திருப்பத்தில்,
நான்கு சந்தின் சதுக்கத்தில்,
படுக்கும் அறையில், முன்விட்டில்
பட்டப் பகலாம் மின்விளக்கு!
வெடுக்கென் றணைந்தால், அந்தந்தோ!
பட்டின வாசம் வேடிக்கை!9

தாளால் மிதிக்கும் மிதிவண்டி,
தடபுட இசைக்கும் மின்வண்டி
நாளும் ஓடும்! நிற்காது!
நல்ல காதும் கேட்காது!
மூளும் இரைச்சல் அடங்காது!
மூடிய விழியும் உறங்காது!
ஆளை ஏற்றி ஆள்இழுக்கும்
அதிசயம் பார்க்கலாம் பேரூரில்! 10



32 ♦ கவிஞர் வாணிதாசன்