பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
17

ஒடாக் குதிரை ஒரு குதிரை!--வீட்டின்
உள்ளே இருக்குது மரக்குதிரை!
காடும் மேடும் ஓடாது!--வாயில்
கடிவாளம் காட்டத் தாவாது!

1

குனிந்த தலையை நிமிர்த்தாது!--வட்டக்
குளம்புக் காலைத் தாழ்த்தாது!
புனைந்த சேணம் மாற்றாது!--மண்ணில்
புரண்டு சோம்பல் ஆற்றாது!

2

புல்லும் கொள்ளும் கேட்காது!--கழுத்துப்
பூட்டுக் கயிறும் கேட்காது!
அல்லும் பகலும் கனைக்காது!--தம்பி
ஆட்ட ஆடும் சளைக்காது

3


36 ★கவிஞர் வாணிதாசன்