பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடலை ஒடுக்கிக் குந்தி,
ஒற்றன் போலத் தூங்கிப்
படரும் இருட்டில் தாவும்
வெருண்ட எலிகள் கூவும்!5

கண்கள் இரண்டும் வேலாம்!
கால்கள் நான்கும் வாளாம்!
உண்ணும் எலிமேற் பாய்ந்தே
கெளவி ஓடும் விரைந்தே!6

எங்கோ சுவரில் உறங்கும்!
பார்ப்பார் எவர்க்கும் இரக்கம்!
மங்கிய இராஎலி வேட்டை!
மாற்றார் அகழிக் கோட்டை!7

துடுக்குப் பூனைக் கொட்டம்
எலியின் தொல்லை மட்டம்!
அடுக்குப் பானை உருட்டும்!
அங்கும் எலியை வெருட்டும்!8

கண்ணைச் சிறிது மூடிக்
காதை மெல்லத் தூக்கி
வண்ணப் பகலில் எல்லாம்
வால்ம டக்கித் தூங்கும்!9

பூனை இல்லா இல்லம்
எலியின் புரட்சி வெள்ளம்!
பூனை செய்வது கொட்டம்!
பொறுத்தால் என்ன நட்டம்?10


52 ♦ கவிஞர் வாணிதாசன்