இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
எருமை கருமை மாடே!
என்றும் பொறுமை மாடே!
அருமை மிக்க மாடே!
அரக்கி நடக்கும் மாடே!
சேற்றில் புரளும் எருமை!
சிறுகுட்டை புரளும் எருமை!
ஆற்றின் ஓரம் மேய்ந்தே
அசையும் போடும் எருமை!
கொம்பு வேலுக் கம்பு!
குட்டை வாலும் சம்பு!
தம்பி கண்ணி ரண்டும்
தண்ட வாளக் குண்டு!
பூத்த குளத்தை அழிக்கும்!
வயலில் புகுந்து மிதிக்கும்!
வாய்த்த கயிற்றை அறுக்கும்
வாழைச் செடியை முறிக்கும்!
54 ♦ கவிஞர் வாணிதாசன்