பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

55

“யார் சொந்தமும் யாருக்கும் வாணாம். அவுங்கவுங்க சொத்து தங்கினாப் போதும்...”

முகத்தில் அடித்தாற் போல் கூறிவிட்டு அவள் பின்கட்டுக்குப் போகிறாள்.

மாடு..... வேதனைப்படுகிறது.

அவிழ்த்துத் தாழ்வாரத்தில் கொண்டுக் கட்டுகிறாள். ஏர் சட்டி சவரெல்லாம் கிணற்றுப்பக்கம் ஒதுக்குகிறாள்.

கிடாரிக் கன்றாகப் போட வேணும்...முருகா... என்று வேண்டுகிறாள்.

குமுறிய வானில் மழைத் தூற்றல் விழுகிறது. பெரிய மழை இன்னும் விழவில்லை என்றாலும், சமையற்கட்டு ஒழுகுகிறது. பானைகளில், பருப்பு, புளி, மிளகாய் வைத்திருக்கிறாள். மேலே ஏறி இந்த மழைக்குத் தாங்குவது போல பிளாஸ்டிக் ஷீட்டோ, மெழுகு சீலையோ போட்டால் பரவாயில்லை. எப்படியேனும் இந்த மழையைத் தாங்கி விட்டால் தை பிறந்தோ கோடையிலோவீட்டுக் கூரை மாற்ற வேண்டும். சமையல் அறையும், பின் தாழ்வரையும் கீற்றுக்கூரை.... மற்ற இடங்கள் ஒடு. பழைய காலத்து நாட்டு ஒடு. அதுவும் பிரித்துக் கட்டத்தான் வேண்டும்.

கால் காணியில் நல்ல மகசூல் வந்து, எல்லா நிலமும் பயன்தரக் கைக்கு வந்து... வளமை கண்டு வீடு பிரித்துக்கட்ட முடியுமா? கிணற்றுப்பாசனப் பூமியைப் பந்தகத்துக்குக் கொடுத்துவிட்டு, கோடைச் சாகுபடி என்றால் அந்தக் கிணற்றுத் தண்ணீருக்கு விலை கொடுக்க வேண்டும். வீட்டு ஆண் பிள்ளை என்று அப்பாவும் படுத்த பிறகு, இவள் புருசனின் எதிர்ப்பையும் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாள்? சரவணனுக்கு வயசு பன்னிரண்டுதான் முடிகிறது. அவனை உழவில் பூட்டலாமா?சீ!

மழை இறங்குவதையும் மாடு தவிப்பதையும் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறான்.

கொல்லையில் வைத்த தெங்கு இப்போதுதான்காய்க்கத் தொடங்கி இருக்கிறது. ஐந்துவருசம் என்று கொண்டு வைத்த பிள்ளை பத்தாவது வருசத்தில்தான்காய்க்கத் தொடங்கிற்று.