பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


கலையின் இல்லம். வேதத்தின் வித்து. ஆசாரத்தின் அரங்கம், பக்தியின் பீடம், தெய்வீக நிலையம். புனிதத்தின் பிறப்பிடம், பக்தர்கள் கூடும் , இடம், பாட்டும் பரதமும் பண்புடன் மிளிரும் கலைக் கூடம். இவை தமிழ் நாட்டின் திருக்கோயில்களாம். -- இன்றையக் காட்சியல்ல. என்றோ இருந்ததாகப் பழங்கதை கூறும்.

இன்று?

அறியாமையின் அரண். சுரண்டலின் சுரங்கம். விபசாரத்தின் விளை நிலம். சோம்பரின் சொர்க்கம். கள்ளர்களின் மாளிகை. அந்தகார அரங்கம், சிந்தனையின் சாவுக்கோட்டை மூடத்தனத்தின் முதலிடம், காமத்தின் வளர்ப்புப்பண்ணை. இன்னும் எவ்வளவோ!

நாட்டின் நலம் கெடுக்கும் நச்சரங்கம் கோயில் நாசகாரக் கும்பல்கள் வைகும் பூமி அது. அறிவுக்கு உலைவைத்து, அறியாமையை பூஜிக்கச் செய்கிறது. சுரண்டலைப் போற்றுகிறது.

இத்தகைய அட்டைச் செயலின் அஸ்திவாரங்கள் மண்ணோடு மண்ணாக்கப்பட வேணும். ஏழ்மையை வளர்க்கும் எதுவானாலும் அது ஒழிக்கப்படுதல் நன்று என்பதே பொருளாதார மாந்தத்துக்கு மாற்று. கோயில்கள் ஏழைகளை ஏழைகளாக வாழச் செய்வதுடன், இன்னும் ஏழைகளாகும்படி தூண்டுகின்றன. அவை ஒழிதல் நன்று. அதற்குரிய யோசனைகள் வரையறுக்கப்பட வேண்டும். -

இன்னும் காலம் தாழ்த்துதல் நல்லதல்ல. இன்று நமக்குத் தேவையானவர்கள் சந்தியாசிகளும், மடாதி