பக்கம்:கோயில்களை மூடுங்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

கோயில்களிலும் வறட்டுத் தவளைகள் மாதிரி கத்திக் கொண்டு பலர் கூச்சலிடுவது பக்தியினாலா? 'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்றும் பாடுவதே புரியாதபடி கத்தும் இவர்கள் 'உண்டக்கட்டிக்'கும் ரெண்டு தோசைக்கும் தான் இப்படித் தொண்டைத் தண்ணீரை வற்ற வைக்கிறார்கள்!

பக்தர்களைப் பற்றிக் கூறியதும் பக்த சிகாமணிகளின் பக்திப் பாடல்களைப் பற்றிச் சொல்லவேண்டியது அவசியமாகிறது. கடவுளின் அன்பைப் பெற பக்தர்களுக்கு சுருக்கு வழி தெரியும்! அது தான் அந்தப்புர தர்பாரை அணுகுவது!

ஆபீசர்களின் தயவை நாடுவோர் ஆபீசர் வீட்டு 'அம்மாக்கமார்களுக்கு' நல்ல பிள்ளைகலாகி விடுவது பூலோக வழக்கம். காய்கறிகள், குழந்தைச் சாமான்கள் இப்படி அந்தப்புரத்துக்கு ஏற்றுமதி செய்து, எஜமானியம்மாளின் கருணைகடாட்சம் பெற்று விஷயத்தைக் கூற, அம்மாள் எஜமான் காதில் போட்டு சிபார்சு செய்வது ஒரு சம்பிரதாயம். இந்த மாமூல் பிரகாரம் பக்தர்களும் செய்திருக்கிறார்கள்!

ஆனால் ஸ்ரீலஸ்ரீ கடவுள் அனுதாபத்துக்கு உரியவராகிறார்! என்ன? சாதாரண மனிதன் கூட , அயலான் தன் மனைவியைப் பற்றி வர்ணிக்க ஆரம்பித்தால் சகிப்பதில்லை. அவளை பிறர் உன்னிப்பாய் கவனிக்கிறார்கள் என்று தெரிந்தால் அவனால் பொறுக்க முடிவதில்லை. ஆனால், பக்த சிகாமணிகள் என்ன செய்கிறார்கள். அம்பிகையின் அங்க வர்ணனை பண்ணுகிறார்கள்! தாராளமாக வார்த்தை உதிர்க்கிறார்கள். கொங்கை வர்ணனை செய்கிறார்கள் பாடல் பாடலாக! அம்பிகையின் அல்குல் அழகாக வாயாறப் புகழ்கிறார்கள். அப்படிப்பட்ட அங்கங்களையுடைய