22
தவத்திரு அடிகளார்
157. “ஒரு விருப்பம் புறக்கணிக்கப்பட்டுப் பிறிதொன்று திணிக்கப் பெறுமானால் அன்பும் ஆர்வமும் கலந்த ஒருமைப்பாடு உருவாகாது”.
158. “அயல் மாநிலங்களில் வாழும் தமிழர்கள். தமிழகத்தோடு உணர்வில்ஒன்றி வாழ்வது தவறில்லை, ஆயினும், எல்லா வகையிலும் தமிழகத்தைப் போல நடந்து கொள்வது நல்லதல்ல”.
159. “ஆரவாரம் செய்யும் கடலோரத்தில் முத்துக்கள் கிடைக்காது. ஆழ்கடலில் தான் முத்துக்கள் கிடைக்கும். ஆழமான மோனத்தில்தான் ஞானம் என்ற முத்து கிடைக்கும்”.
160. “ஐரோப்பிய இனம் (ஆங்கிலேயர்கள்) ஆரிய இனம், திராவிட இனம் என்ற உலகத்தின் தலை மூத்த இனத்தாரில் தம் நிலை தாழாது வாழ்வன ஆங்கில இனமும் ஆரிய இனமுமே. திராவிட இனம் அத்தகு பேறு பெறவில்லை. ஏன்? ஆர்ப்பரவம் செய்தல், அடிமைப் புத்தியிலிருந்து மீளாமை ஆகியவையே காரணங்கள்”.
161. “திருவள்ளுவரையும் வள்ளலாரையும் தமிழகம் பின்பற்றாததால்தான் நம்நிலை தாழ்ந்தது”.
162. “போர்ட் பிளேயர் அரசு மிருகக் காட்சி சாலையில் ஒரு பெண் குரங்குடன் வேறு ஒர் ஆண் குரங்கு சண்டைப் போட்டது. உடன் கடுவன் குரங்கு அந்தப் பெண் குரங்குக்காகப் பரிந்து சண்டைபோட வந்துவிட்டது. இன்று எத்தனை கணவன்மார்கள் தன் மனைவிக்காகத் தன் தாயிடத்தில் பரிந்து பேச முன் வருவர்? வந்தால் ஏன் ஸ்டவ் வெடிக்கிறது?”