பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சிலப்பதிகாரம்

தண்பதிப் பெயர்ந்த னனாக - நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி , வார்த்திகண் தன்னைக் காத்தனர் ஒம்பிக் 100 கோத்தொழில் இளையவர் கோமு றைஅண்றிப், "படுபொருள் வெளவிய பார்ப்பான் இவன்" என, இடுசிறைக் கோட்டத்து இட்டனராக;வார்த்திகன் மனைவி, கார்த்திகை எண்போள், அலந்தனள், ஏங்கி அழுதனள், நிலத்தில் 105 புலந்தனள், புரண்டனள், பொங்கினள்; அதுகண்டு, மையறு சிறப்பின் ஐயைகோயில் செய்வினைக் கதவம் திறவா தாகலின்திறவாது அடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மண்னவண் கேட்டனண் மயங்கிக், 110 "கொடுங்கோல் உண்டுகொல்? கொற்றவைக் குற்ற இடும்பையாவதும் அறிந்தி மிண்" எனஏவல் இளையவர் காவலன் தொழுது, வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி உரைப்பநீர்த்தன்று இது என நெடுமொழி கூறி, 115 "அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவெண் இறைமுறை பிழைத்தது; பொறுத்தல்நும் கடன்" எனத் தடம்புனல் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக், கார்த்திகை கணவண் வார்த்திகண் முன்னர், 120 இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி அவள் தணியா வேட்கையும் சிறிதுதணித் தனனே, நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் கலையமர் செல்வி கதவம் திறந்தது; 125 "சிறைப்படு கோட்டம் சீமின் யாவதும் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின், இடுபொருள் ஆயினும், படுபொருள் ஆயினும், உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம்" என, யானை எருத்தத்து, அணிமுரசு இரீஇக் 130 கோண்முறை அறைந்த கொற்ற வேந்தன் தாண்முறை பிழைத்த தகுதியும் கேள் நீ;