146 சிலப்பதிகாரம்
3. வஞ்சிக் காண்டம் 24. குன்றக்குரவை
கொச்சகக்கலி
குறவர் சந்திப்பு 'குருவி ஒப்பியும் கிளி கடிந்தும்
குண்றத்துச் சென்று வைகி; அருவி ஆடியும் சுனை குடைந்தும், அலவுற்று வருவேம்முண், மலை வேங்கை நறுநிழலின்,
வள்ளி போல்வீர்! மனம்நடுங்க, முலை இழந்து வந்து நின்றீர்;
யாவிரோ' என- முனியாதே, 'மண மதுரையோடு அரசு கேடுற
வல்வினை வந்து உருத்த காலைக் 5 கணவனை அங்கு இழந்து போந்த
கடுவினையேண் யான்' என்றாள்;
தெய்வமாக் கொள்ளுதல் என்றலும், இறைஞ்சி, அஞ்சி,
இணை வளைக்கை எதிர்கூப்பி, நின்ற எல்லையுள், வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து, குன்றவரும் கண்டு நிற்பக்,
கொழுநனொடு கொண்டு போயினார்; 'இவள் போலும்நங் குலக்கோர்
இருந் தெய்வம் இல்லை ஆதலின், (10)
சிறுகுடி யீரே! சிறுகுடி யீரே! தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே! நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை, நறுஞ்சினை வேங்கை நன்னிழற் கீழோர்