கால்கோட் காதை
167
தாரும் தாரும் தாமிடை மயங்கத் தோளும் தலையும் துணிந்துவே றாகிய சிலைத்தோள் மறவர் உடற்பொறை அடுக்கத்து எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம் பறைக்கண் பேய்மகள் பாணிக்கு ஆடப் பிணஞ்சுமந்து ஒழுகிய பிணம்படு குருதியில் கணங்கொள் பேய்மகள் கதுப்பு:இகுத்து ஆட;
அடுந்தேர்த் தானை ஆரிய அரசர் கடும்படை மாக்களைக் கொண்று களங்குவித்து, நெடுந்தேர்க் கொடுஞ்சியும், கடுங்களிற்று எருத்தமும்; விடும்பரிக் குதிரையின் வெரிதும் பாழ்பட்; "எருமைக் கடும்பரி ஊர்வோன் உயிர்த்தொகை ஒருபகல் எல்லையில், உண்ணும்" என்பது ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய நூழிலாட்டிய சூழ்கழல் வேந்தன்: போந்தையொடு தொடுத்த பருவத் தும்பை ஒங்கிருஞ் சென்னி மேம்பட மலைய
கனகவிசயர் சிறைப்படல் வாய்வாள் ஆண்மையின், வண்தமிழ் இகழ்ந்த காய்வேல் தடக்கைக் கனகனும் விசயனும், ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு, செங்குட் டுவண் தண் சினவலைப் படுதலும்சடையினர், உடையினர், சாம்பற் பூச்சினர்; பீடிகைப் பீலிப் பெருநோண் பாளர். பாடு பாணியர், பல்லியத் தோளினர், ஆடு கூந்தர் ஆகி, எங்கனும் ஏந்துவாள் ஒழியத் தாம்துறை போகிய விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தரக் -
205
210
220
225
230