பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிமனை வகுத்தல் வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி மறப்பு அரும் கேண்மையொடு, அறப்பரி சாரமும், 85 விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும், வேறுபடு திருவின் வீறுபெறக் காண, உரிமைச் சுற்றமொடு ஒருதனி புணர்க்க, யாண்டு சில கழிந்தன. இற்பெருங் கிழமையின் காண்தகு சிறப்பின் கண்ணகி தனக்கு எண். 90

வெண்பா

துTமப்பணிகள் ஒன்றித் தோய்ந்தால்என, ஒருவார் காமர் மனைவிஎனக் கைகலந்து - நாமம் தொலையாத இன்பம் எலாம் துண்ணினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று.

3. அரங்கேற்று காதை

நிலைமண்டில ஆசிரியப்பா மாதவி அறிமுகம்

தெய்வ மால்வரைத் திருமுனி அருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப்பு அருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குண்றாச் செய்கையொடு பொருந்திய 5 பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாது.அவிழ் புரிகுழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக் கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல், ஏழ்ஆண்டு இயற்றி, ஓர் ஈள் ஆறு ஆண்டில் 10 சூழ்கழல் மண்னற்குக் காட்டல் வேண்டி