பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 சிலப்பதிகாரம்

துணிந்து ஆற்றும் வலிமைச் செயல்; அதனால் அது மறம் எனக் கூறப்படுகிறது. உயிரைத் துணிந்து தர முற்படுகிறான்; எனவே இதுவும் கொடைத் திறத்தின்பால் படும் என்று கூறலாம்.

மற்றும் பொய்க்கரி புகன்றவனை மீட்கச் சதுக்க பூதத்தின் பாசத்தில் அகப்படத் தன்னை அளிக்க முன் வருகிறான்; இதுவும் கொடைத் திறம் என்று கூற வேண்டும். அவன் குடும்பத்துக்குப் பெரும் நிதி அளிக்கிறான்.

மற்றும் பார்ப்பனன் எழுதித் தந்த வடமொழி வாசகம் அதை விலை கொடுத்து வாங்கித் தானம் செய்கிறான்; அவர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்குகிறான்.

இபமூன்று செயல்கள் அவன் புகழ் உடையவன் என்பதற்குச் சான்றுகளாக இடம்பெறுகின்றன.

இவன் வணிக மகன்; செல்வச் சிறப்பு இவனுக்குப் பெருமை தருகிறது. ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப் பொன் கொடுத்து மாதவி மாலையை வாங்கி அவளை அடைகிறான். இவன் இன்பம் நாடிச் செல்வது இவன் போக்கு எனத் தெரிகிறது.

நகர நம்பியர் திரிதரு மன்றத்தில்தான் கூனி இவனைச் சந்திக்கிறாள். எனவே அவன் அங்கு எப்பொழுதும் திரிந்து வந்தவன் என்று தெரிகிறது. மகிழ்ச்சியில் இவன் நாட்டம் மிக்கு உடையவன் என்பது தெரிகிறது.

'குரல்வாய்ப் பாணரொடு நகரப்பரத்தரொடு திரிதரு மரபின் கோவலன் போல' வண்டினொடும் இளவேனிலொடும் தென்றல் மறுகில் திரிகின்றது என்று கூறுவர்

'வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப்புண்டு பொருள் உரையாளர் நச்சுக் கொன்றேற்கு நன்னெறி உண்டோ?

என்று கூறித் தன் செயல்களைக் கூறுகிறான்.