பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணி நலன்கள் 225

திங்களைப் போற்றுகிறார்; ஞாயிறு, மழை, புகார் இவை யும் போற்றப்படுகின்றன. அவை சோழர் நல்லாட்சி, ஆட்சிப் பரப்பு, கொடைச் சிறப்பு, குடித்தொன்மை இவறறிற்கு உவமிக்கப்படுகின்றன. இவற்றுள் சொல்லவந்த செய்தி யாது? திங்களா சோழர் ஆட்சியா சிந்திக்க வைக்கின்றார்.

ஒரே கல்லில் இரண்டு கனிகளை விழ வைத்திருக்கிறார் வான் சிறப்பும் அரசு வாழ்த்தும் இரண்டையும் சேர்த்துக் கூறி இருப்பது அவர் கற்பனைத் திறனைக் காட்டுகிறது.

தெய்வங்களையும் மற்ற அவர்கள் உடைமைகள் செய்களையும் உவமைப்படுத்துவது அவர் மரபு என்று, தெரிகிறது. கண்ணகி திருமகள் வடிவினள் என்றும் வடமீனின் திறம் இவள் திறம் என்றும் கூறுவார். முருகனைப் போன்ற அழகன் கோவலன் என்கிறார்.

பிறை நுதல், வேல் கண், கரும்பின் வளைவு புருவம், மெல்லிடை எனச் சொல்ல வந்தவர் சிவபெருமான் தந்த பிறை, முருகன் ஈந்த வேல், மன்மதன் அளித்த வில், இந்திரன் அளித்த வச்சிராயுதம் என்று உவமைகளைச் சிறப்பித்துக் கூற க்காண்கிறோம்.

மயில் போன்ற சாயல், அன்னம்போன்ற நடை, கிளி போன்ற பேச்சு என்று கூற வந்தவர் அவைகள் தோற்று ஒடின . என்று கூறுவது நயம் மிக்கதாகும். -

உருவகங்கள் மறக்க முடியாதவை உவமைகளைவிட உருவகங்களுக்கு ஆற்றல் மிகுதி. சொற்களைக் குறைக்க முடி கிறது. செய்திகள் கொள்வார் விருப்பத்திற்கு விடப்படு கின்றன.

'மாசறு பொன்னே வலம்புரிமுத்தே

  • *

காசறு விரையே கரும்பே தேனே

என்று கூறுவது அழகிய உருவகங்கள் ஆகும்

எதிர் மறுத்துக் கூறி உருவகங்களை மேலும் சிறப்புப்

பெற வைத்து இருப்பதைக் காணமுடிகிறது.

'மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ யாழிடைப் பிறவா இசையே என்கோ'