பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் கதை 337

அதைப் பொறுக்காமல் அவற்றைச் சான்று கூற அழைக்க அவையோர் முன் அவை வந்து நின்றன. அற்புதம் விளைவித்தாள் இந்தப் பொற்பு நிறைந்த குழலாள்'.

காவிரிக் கரையில் மணல் பாவை ஒன்று அமைத்து வைத்து, இவன் உன் கணவன் ஆவான் என்று தோழியர்கள் கூற அச்சிறுமி அப்பாவையைக் காவிரி அலைகள் வந்து அடித்துச் செல்லாமல் அணை போட்டாள்; அதனைத் காத்தாள்; அந்த இடத்தை விட்டு அகலவே இல்லை; அவள் கற்பின் திண்மை அது'.

'கரிகாலன் மகள் ஆதிமந்தி வஞ்சி நாட்டு வாலிபன் ஆட்டன் அத்தியைக் காதலித்தாள்; அவனைக் காவிரி அலை அடித்துக் கொண்டு கடலுக்குச் செல்ல வெள்ளத்தோடு இவளும் கரைஒரம் ஒடிச் சென்று கடலை விளித்து என் கணவனைக் காட்டாயோ என்று கதற அதன் அலைகள் அவனைக் கொண்டு வந்து முன் நிறுத்தின. இது தமிழகக் காதல் கதை, அதை ஒதிப் பழகியது நாங்கள்'.

'திரைகடந்து பொருள் தேடச் சென்ற கணவன் வரும் வரை கரையில் கல்லாக நின்றாள் நல்லாள் ஒருத்தி, அவன் கரை வந்து சேர அவள் பழைய கல்லுருவம் கரைந்து தன் நல்லுருவம் பெற்றாள். அசையாத மனநிலை; அவள் எங்களுக்குத் திசைகாட்டியாகத் திகழ்கிறாள்.'

'மாற்றாள் குழந்தை கிணற்றில் தவறி விழ ஆற்றாளாகித் தன் குழந்தையையும் தள்ளி இரண்டு குழந்தைகளையும் அக்கிணற்றில் குதித்துக் கரை சேர்த்தாள் ஒரு வீரமகள். அவள் ஆற்றல் எங்களால் போற்றத் தக்கதாக உள்ளது; தீரச் செயலுக்கு அவள் பெயர் எடுத்த வீரமங்கையாவாள்'.

'வேற்று ஆள் ஒருவன் ஒருத்தியின் பேரழகைக் கண்டு இடம் பெயராமல் நின்றான். அவள் தன்முகத்தைக் குரங்கு முகமாகுக எனக் கூறி ஆடவர் நெஞ்சில் இடம் பெறுவதை அறவே தவிர்த்தாள். தன் கணவன் வந்ததும் தன் திரிந்தமுகத்தை மாற்றிச் சிரித்த முகத்தள் ஆயினாள். ப்ழைய நிலையில் தன்னை அவள் மாற்றிக்கொண்டு சீர் பெற்றாள்; அவள் கீர்த்தி இன்றும் பேசப்படுகிறது.'