பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 வரந்தரு காதை

கள், காமம், பொய், பயனற்ற சொற்கள் இவை தீமை பயக்கும்; இவற்றை நீக்கி வாழ்க; இளமையும், யாக்கையும், செல்வமும் நில்லா; உள்ள நாட்களில் உறுதிகளைத் தேடுக; இதுவே வீட்டு நெறி; பயனுள்ள வாழ்க்கை'

'இந்த அறநெறிகளைப் போற்றிக் காத்து உயர்வு அடைவீராக” என்று வாழ்த்துக் கூறி இளங்கோவடிகள் காவியத்தை முடிக்கின்றார். "இக்காவியம் தரும் உயர் அறங்கள் இவை எனக் கொள்க! நலம் பெறுக' என்ற வாழ்த்தோடு இக்காவியம் முடிவு பெறுகிறது.