பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் த்

37

கோலம்கொள் மாதவி ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்பப் பத்துத் துவரினும், ஐந்து விரையினும், முப்பத்து இருவகை ஒமா லிகையினும் ஊறின நல்நீர், உரைத்தநெய் வாசம் நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையின் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறும் மாண்மதக் கொழுஞ்சேறு ஊட்டி அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி நலத்தகு மெல்விரல் நல்அணி செl இப் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம், காலுக்கு அமைவுற அணிந்து குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்துப் பிறங்கிய முத்திரை முப்பத்து இருகாழ் நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇக் காமர் கண்டிகை தண்னொடு பின்னிய து.ாமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம், செம்பொன் கைவளை, பரியகம், வால்வளை, பவழப் பல்வளை, அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம், கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம், வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி. காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து சங்கிலி நுண்தொடர் பூண்ஞாண் புனைவினை அங்கழுத் தகவயின் ஆரமோ டணிந்து கயிற்கடை ஒமுகிய காமர் துாமணி செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து ஆங்கு இந்திர நீலத் திடையிடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பு இணை

75

80

85

90

95

i00