பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ۔ -- ـ یہ Tگیم , ,* . . ام۔ جن 38 சல்ப்பதிகாரம்

அம்காது அகவயின் அழகுற அணிந்து 105 தெய்வ உத்தியொடு, செழுநீர் வலம்புரி, தொய்யகம், புல்லகம், தொடர்ந்த தலைக்கு அணி மைஈர் ஒதிக்கு மாண்புற அணிந்து கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப் பாடு.அமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள் #10 உருகெழு மூதூர் உலவுத்தலை வந்தெனப் பெருநீர் போகும் இரியல் மாக்களொடு மடலவிழ் கானற் கடல்விளை யாட்டுக் காண்டல் விருப்பொடு வேண்டினளாகிப் பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப || 5 வைகறை யாமம் வாரணம் காட்ட வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடியத் தாரணி மார்பனொடு பேரணி அணிந்து வான வண்கையன் அத்திரி ஏற மானமர் நோக்கியும் வையம் ஏறிக் i20 கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை மாடமலி மறுகிற் பீடிகைத் தெருவின்

மலரணி விளக்கத்து மணிவிளக் கெடுத்தாங்கு அலர்கொடி அறுகும் நெல்லும் வீசி மங்கலத் தாசியர் தங்கலண் ஒலிப்ப 125 இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும் திருமகன் இருக்கை செவ்வனங் கழிந்து மகர வாரி வளந்தந் தோங்கிய

நகர வீதி நடுவண் போகிக், கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் 130 வேலைவா லுகத்து விரிதிரைப் பரப்பிற் கூல மறுகிற் கொடியெடுத்து நுவலும் மாலைச் சேரி மருங்குசென்று எய்தி வண்ணமும் சாந்தும் மலரும் கண்ணமும் பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும் ! 35 செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்