பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சிலப்பதிகாரம்

ஓவிய எழினி சூழவுடன் போக்கி விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை f70 வருந்துபு நின்ற வசந்த மாலைகைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக் கோவலன் தண்னொடும் கொள்கையின் இருந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தானென். #74

- வெண்பா வேலை மடல் தாழை யுட்பொதிந்த வெண்தோட்டு மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக் களிநறவம் தாதுTதத் தோன்றிற்றே காமர் தெளிநிற வெங்கதிரோண் தேர்.

7. கானல் வரி

ஆசிரியர் கூற்று கட்டுரை சித்திரப் படத்துட்புக்குச் செழுங்கோட்டிண்மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தரும் கோடும் ஆணியும் நரம்புமென்று

இத்திறத்துக் குற்றம் நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கிப் பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசையெழி இப் பணி வகையால் பரிவுதிர்ந்து மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப் பட்டடை யென இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியின்ஒர்த்து