Soদ চন্তন কc uী
4
1
ஏவலண்பின் பாணியாதெனக் கோவலன் கையாழ் நீட்ட அவனும் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனமகிழ வாசித்தல் தொடங்குமண்.
காவிரி நோக்கிப் பாடுதல் திங்கள் மாலை வெண்குடையாண்,
சென்னி செங்கோல் அது ஒச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி, காவேரி! கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழில், கயற்கண்ணாய் ! மங்கை மாதர் பெருங்கற்பு எண்று
அறிந்தேன் வாழி காவேரி !
மன்னும் மாலை வெண்குடையாண்
வளையாச் செங்கோல் அது ஒச்சிக் கண்னிதன்னைப் புணர்ந்தாலும், புலவாய் வாழி, காவேரி ! கண்னிதன்னைப் புணர்ந்தாலும்,
புலவா தொழில், கயற்கண்ணாய் ! மன்னும் மாதர் பெருங் கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி !
உழவர் ஒதை மதகு ஓதை,
உடைநீர் ஒதை, தண்பதங் கொள் விழவர் ஒதை, சிறந்து ஆர்ப்ப
நடந்தாய் வாழி, காவேரி விழவர் ஒதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா மழவர் ஒதை வளவன் தன்
வளனே வாழி, காவேரி !