கானல் வரி
51
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழி இப் பாங்கினில் பாடி, ஒர் பண்ணுப் பெயர்த்தாள். நுளையர் விளரி நொடிதரும் தீம்பாலை இளி கிளையில் கொள்ள இறுத்தாயால், மாலை ! இளி கிளையில் கொள்ள இறுத்தாய்மண் நீயேல், கொளை வல்லாய் ! எண் ஆவி கொள்; வாழி; மாலை !
பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் இருளின் நீழல் இருந்து, ஏங்கி, வாழ்வார் உயிர்ப்புறத்தாய், மாலை ! உயிர்ப் புறத்தாய் நீ ஆகில், உள் ஆற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தனோடு எண் ஆதி, மாலை ? பையுள்நோய் கூரப், பகல் செய்வான் போய்வீழ, வையமோ கண்புதைப்ப, வந்தாய், மருள்மாலை ! மாலை நீ ஆயின், மணந்தார் அவர் ஆயின, ஞாலமோ நல்கூர்ந்தது; வாழி, மாலை ! தீத்துழைஇ வந்தஇச் செவ்வண் மருள்மாலை துக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடல் தெய்வநிண் மலரடி வணங்குதும்
எனக்கேட்டு, கானல்வரி யாண்பாடத் தான் ஒன்றின் மேல் மனம்
(வைத்து,
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் என, யாழ் - இசைமேல் வைத்துத் தண் ஊழ்வினை வந்து
(உருத்தது ஆகலின்,
உவவுஉற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை
(ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின், எழுதும்' என்று
(உடன் எழாது. ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன்-தாண் போன பின்னர்த்
46
47
48
49
50