எஸ். எம். கமால்
79
இந்தக் கற்கோட்டையைப் பின்னால் வந்த சேது மன்னர்களும் ஜமீன்தாரர்களும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவைகளை அமைக்க பெரிதும் உதவியவர் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் என்ற கீழக்கரை வணிக வேந்தர் ஆவார் என்ற செய்தி இராமநாதபுரம் மேனுவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் கோட்டை ஒரே ஒரு தரை வாயிலுடன் செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட கற்சுவர்களால் அமைக்கப்பட்டது. இராமநாதபுரம் அரண்மனையில் சேது மன்னரும் அவரது அரச பிராட்டிகளும் தங்குவதற்கு ஏற்ப பல அறைகள் கொண்ட மண்டபங்களையும் சேது மன்னர் கொலு வீற்றிருப்பதற்கான அத்தாணி மண்டபத்தையும், ஆயுதச் சாலையையும் அமைத்ததுடன் இராமநாதபுரம் அரண்மனையின் அன்றாட அலுவல்கள் எவ்விதம் நடக்க வேண்டும் என்பதற்கான வரையறைகளையும் சீதக்காதி மரைக்காயர். மன்னருக்கு வகுத்துக் கொடுத்தார். மேலும் மன்னர் நீராடுவதற்கு என்று அத்தாணி மண்டபத்தின் வடபகுதியில் நீராடுவதற்கான நீச்சல் குளம் ஒன்றையும் அமைத்து இருந்தார். இராமநாதபுரம் நகருக்கான குடிநீர் தேக்கமான முகவையூரணியிலிருந்து இந்த நீச்சல் குளத்திற்கு நீர் வசதி பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஜமீன்தார்களின் ஆட்சியின் பொழுது இந்த நீச்சல் குளம் பயனற்றதாகச் செய்யப்பட்டது. அண்மைக்காலம் வரை அந்தப் பகுதி பூப்பந்து விளையாடும் இடமாக இருந்து வந்தது. கி.பி. 1772-ல் ஜூன் மாதம் 3-ஆம் தேதி இராமநாதபுரம் அரண்மனையைக் கைப்பற்றிய ஆங்கில தளபதி ஜோசப் ஸ்மித் இந்த அரண்மனையின் அழகினைத் தமது அறிக்கையில் பதிவு செய்திருந்தார். அவரைப் போன்றே கி.பி. 1796-ல் இங்கு வருகைதந்த சென்னை தளபதி ஜெனரல் பேட்டர்சன் இராமநாதபுரம் அரண்மனையின் அமைப்பு பற்றிய முழு விவரங்களையும் தமது பயணக் குறிப்பில் வரைந்து வைத்துள்ளார்.[1][2]
ஜமீன்தார்களது ஆட்சியில் இந்த அரண்மனையின் நுழைவாயிலை ஒட்டிய இரு பகுதிகளிலும் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டன.
மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்கள் காலத்தில் இராமலிங்க விலாசம் அரண்மனையை அடுத்து வட பகுதியில் ஒரு சிறிய மிருகக்காட்சி சாலையையும் அமைத்துப் பொதுமக்கள் அதனைக் கண்டு களிக்கச் செய்யப்பட்டது. அந்த மிருகக் காட்சி சாலையில் மான்கள், புலி,