பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

படிப்பும், அவர்தம் தமிழ்ப் பணியை, ஆராய்ச்சித் திறனைத் தொடர்ந்து செய்யத் துாண்டுகிறது. இத்தகைய அறிவாற்றல் நிறைந்தவர்களுடைய பணி நம்முடைய சமுதாயத்திற்கு மிகவும் தேவை. ரெட்டியார் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து, நம்முடைய தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாடுகள் பலவற்றையும் இவ்வையகம் அறியும்படி விளக்க உரைகள் எழுதுவார் என்ற நம்பிக்கை எங்களைப் போன்றவர்களுக்கு மிகவும் உண்டு.

வாழ்க சுப்புரெட்டியார் அவர்கள்! வளர்க அவர்தம் தெய்விகத் தமிழ்த் தொண்டு!

- பு.ரா. கோகுலகிருஷ்ணன்
சென்னை - 20
30-06-1981.